சென்னை, செப்.28– இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத் தில், மாதவரம் சிறுசேரி சிப்காட் வரையிலான 3ஆவது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, சேத்துப் பட்டில் இருந்து கீழ்ப் பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம்.
சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது வழித்தடம் ஆகும். 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணி கள் விறுவிறுப்பாக நடை பெறுகின்றன.
இதன் ஒருபகுதியாக. 2.8 கி.மீ. தொலைவில் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம் பரில் தொடங்கியது. முதலில், சிறு வாணி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியில் ஈடுபட்டது. இந்த இயந்திரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் பணியை நிறைவு செய்தது. இதுபோல, இதே பாதையில் பாலாறு என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபரில் பணியை முடித்தது.
இதற்கிடையே, சேத்துப்பட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நோக்கி, சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இப்பணியில் பவானி, தாமிரபரணி ஆகிய சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி காரிகள் கூறியதாவது:
சேத்துப்பட்டுவடக்கு-கீழ்ப்பாக் கம் நோக்கி சுரங்கப்பாதை பணி தற்போது சீரான வேகத்தில் நடை பெறுகிறது. இப்பணியை மேற் கொள்ள ‘தாமிரபரணி, ‘பவானி ஆகிய சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படு கின்றன. மொத்தம் 674 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்க வேண் டும். இத்தடத்தில் மேல் பாதை அமைக்கும் பணியில் தாமிரபரணி சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஈடுபட்டுள்ளது.
தற்போது வரை 459 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்தது. அடுத்த மாதத்துக்குள் இத்தடத்தில் மேல் பாதை பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கீழ் பாதை பணி இம்மாதம் தொடங்கியது. இதுவரை 8,4 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டுவடக்கு-கீழ்ப்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைப் பதுமிகப்பெரியசவால் நிறைந்தது. ரயில்வே தண்டவாளம் தவிர, படகு குளம், சேத்துப்பட்டு சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்து செல்ல வேண்டி யுள்ளது. இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். 3 மாதங்களுக்குள் சுரங்கப் பாதை பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.