கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

27.9.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாட்டைப் போன்று, பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட அரசு ஆணை பிறப்பித்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உத்தரகாண்டில் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராடும் மாணவர்களுக்கு ராகுல் ஆதரவு. பாஜகவை ‘வினாத்தாள் திருடர்கள் ‘ என விமர்சனம்.

தி இந்து:

* சமீபத்திய விகிதக் குறைப்புகளால் ஏற்படும் வருவாய் இழப்பை மாநிலங்களுக்கு ஈடு செய்வது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கவில்லை என்று கவுன்சிலின் உறுப்பினர்களான தெலங்கானா மற்றும் கேரள நிதி அமைச்சர்கள் புகார்

டைம்ஸ் ஆப் இந்தியா:

* லடாக் கலவரம், வாங்சுக் கைதுக்கு எதிர்ப்பு: லடாக்கில் சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில் பாஜகவின் “மோசமான தோல்வியிலிருந்து” “கவனத்தையும் பொறுப்பையும் திசைதிருப்ப” மோடி அரசாங்கத்தின் நடவடிக்கை இந்த கைது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* கருநாடகாவில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு: பெங்களூரு விடுதியில் நடந்த ‘இந்தி ஊக்குவிப்பு’ கூட்டத்திற்கு எதிராக 41 கன்னட ஆதரவு ஆர்வலர் கள் போராட்டம். ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தியை திணிக்கும் முயற்சி என்று குற்றச்சாட்டு.

* பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் மீது அவமதிப்பு வழக்கு: இந்தியாவின் வளர்ச்சிக்கு நீதித்துறை மிகப்பெரிய தடையாக இருப்பதாக கூறியதற்காக சஞ்சீவ் சன்யால் மீது அவமதிப்பு நடவடிக்கைகளை தொடங்க இரண்டு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் அட்வகேட் ஜெனரல் அனுமதி கோரியுள்ளனர்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *