கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.9.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பீகார் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி, காங்கிரஸ் ஆதரவு.

* பீகார் தேர்தலில் தெலங்கானா மாடலான பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியை முன்னிறுத்தி போட்டியிட காங்கிரஸ் திட்டம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* லடாக் போராட்டம்; பாஜக அலுவலகம் தீ வைப்பு: லடாக்கிற்கு முழுமையான மாநில அந்தஸ்தும், இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணையில் சேர்த்தலும் கோரி லேவில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. போராட்டம் வன்முறையாக மாறி, காவல்துறையினருடன் மோதல்கள் நடந்ததுடன் பாஜக அலுவலகம் தீவைக்கப்பட்டது.

* விஜய் வருமான வரி அபராத வழக்கு: நடிகர்-அரசியல்வாதி விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் சட்டபூர்வமான காலக்கெடுவுக்குள் வழங்கப்பட்டது என்று வருமான வரித்துறை  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தி இந்து:

* பீகார் EBC காப்பு சட்டம்: இந்தியா கூட்டணி (INDIA BLOC) பீகாரில் மிகப் பின்தங்கியோர் (EBC) மீது நடைபெறும் அத்துமீறல்களுக்கு எதிராக, எஸ்சி, எஸ்டி தடுப்பு சட்டம் போன்று ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளது.

* மகாராட்டிரா மொழிக் குழு: மாநில மொழி ஆலோசனைக்குழு, மூன்று மொழிக் கொள்கை அமல்படுத்தும் நரேந்திர ஜாதவ் குழுவை கலைக்க தீர்மானம் நிறைவேற்றியது.

* யுஜிசி பாடத்திட்டம்: வரலாற்றாளர் ரோமிலா தாப்பர், யுஜிசி-யின் புதிய பாடத்திட்ட வரைவு பல்கலைக்கழக சுயாட்சிக்குள் தலையீடு செய்து, கல்வித் தரத்தை சீர்குலைக்கும் எனக்
கண்டனம்.

தி டெலிகிராப்:

* ராகுல் காந்தி விமர்சனம்: காந்தி நகரின் பேடாபூர் குடிசைப்பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் “அனுமதியற்றது” என கூறி இடிக்கப்பட்டதை குறிப்பிடும் ராகுல் காந்தி, “ஏழைகளுக்கு புல்டோசர், அதானிக்கு நிலம்” என பாஜகவை தாக்கி விமர்சனம்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *