தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

1 Min Read

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, செப். 25- தந்தை பெரியார் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் பெரியார் மெடிக்கல் மிஷன் இயக்குநர் மருத்துவர் கவுதமன் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர்  முனைவர் இரா.செந்தாமரை அறிவுறுத்தலின்படி டாக்டர் முைனவர் சுல்தானா தலைமையில் 17.9.2025 அன்று நடைபெற்றது.

மகப்பேறு மருத்துவர் தவுலத், பல் மருத்துவர் பிரசன்னா, பொதுநல மருத்துவர் முனைவர் சுல்தானா மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அலுவலர்கள், பெரியார் மணியம்மை மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர்கள் வி.ஹெலன்பிரின்சி, ஆர்.காமாட்சி, பி.ஹேமமாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான மருத்துவப் பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *