விடுதலை சந்தா சேர்ப்பு தீவிரம்

Viduthalai
2 Min Read

டிசம்பர்-2 சுயமரியாதை நாள்  பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கழக பொறுப்பாளர்களுடன் வீடு வீடாக விடுதலை சந்தா சேர்ப்பு

பொள்ளாச்சி, நவ. 26- 25-11-2023 அன்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொள்ளாச்சி கழக மாவட்டம், பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி, நாயக்கண் பாளையம், ஆனைமலை, அம்பராம்பாளையம், சூலேஸ் வரன்பட்டி, வேட்டைக்காரன்புதூர், சந்திராபுரம், திப்பம் பட்டி, குமரன் நகர், வடுகபாளையம், மகாலிங்கபுரம், ஒடைய குளம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று முக்கிய பிரமுகர் களை சந்தித்து கழகப் பொறுப்பாளர்கள் விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்

90 வயதிலும் நாள்தோறும் இயங்குவதோடு நம்மையும் நம் இனத்தையும் நாளும் இயக்கி வழிநடத்தக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உயிரோடும் உணர் வோடும் கலந்துள்ள இனவுரிமை மீட்பு ஏடான  “விடுதலை நாளிதழ்”சந்தாக்களை( டிசம்பர்-2 சுயமரியாதை நாள்) நமது தலைவரின் 91-வது பிறந்தநாள் பரிசாக கழகத் தோழர்கள், முக்கிய பிரமுகர்கள் விடுதலை சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தார்கள்

திராவிட முன்னேற்றக் கழக பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் விடுதலை 1 ஆயுள் சந்தா, 1 ஆண்டு சந்தா  ரூ 22,000 திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் பொள்ளாச்சி தமிழ்மணி 1 ஆண்டு சந்தா, திமுகபொள்ளாச்சி ஒன்றிய செயலாளர் மருதவேல் 1 ஆண்டு சந்தா, மாவட்ட தி.க துணைத் தலைவர் ஜெ. செழியன் 1 ஆண்டு சந்தா, வழக்குரைஞர் சேதுபதி 1 ஆண்டு சந்தா, பொறியாளர் சரவணபவன் 1 ஆண்டு சந்தா, பா.செந்தில்வேல் 1 ஆண்டு சந்தா,  ஜமீன் ஊத்துக்குளி திமுக பொறுப்பாளர் நெடுஞ்செழியன் 1 சந்தா, நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திமுக ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து இரண் டரை ஆண்டு சந்தா ரூ 5000, அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வசந்தகுமார் 5ஆண்டு சந்தா ரூ10,000, பொள்ளாச்சி நகர தலைவர் வடிவேல் 1 ஆண்டு சந்தா, பொள்ளாச்சி கழக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் 1 ஆண்டு சந்தா, மாவட்டதி.க தலைவர் மாரிமுத்து 1 ஆண்டு சந்தா, ஆனைமலை பேரூராட்சி தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தகுமார் 1 ஆண்டு சந்தா, சூலேஸ் வரன்பட்டி பேரூராட்சி திமுக செயலாளர் ஆறுச்சாமி 1 ஆண்டு சந்தா, திராவிடர் கழக காப்பாளர் பொறியாளர் பொள்ளாச்சி பரமசிவம் ரூ.10,000 வேட்டைக்காரன்புதூர் கண்ணன் 10 ஆண்டு சந்தா கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் விடுதலை சந்தாக்களை வழங்கினர். மேலும் விடுதலை சந்தாக்களை திரட்டி டிசம்பர் 2 சென்னையில் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்குவதாக உறுதி அளித்தனர்

கழக காப்பாளர் பொள்ளாச்சி பொறியாளர் பரமசிவம், மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் செழியன், பொள்ளாச்சி நகரத் தலைவர் வடிவேல், நகர அமைப்பாளர் வீரமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்தி, கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் மாநில இளைஞ ரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் ஆகி யோர் உடன் இருந்தனர் (25-11-2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *