எதிர்பார்த்த திட்டத்திற்கு விடிவு! மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் கூவம் ஆற்றில் கட்டுமானப் பணிகள் பருவமழைக்கு முன்பே முடிவடையும் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

1 Min Read

சென்னை செப். 20-   சென்னை தியாக ராய நகர் தனியார் விடுதியில் நடந்த நீலப் பொருளாதார மாநாடு-2025யை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பருவமழைக்கு முன்பே மதுரவாயல்- சென்னை ஈரடுக்கு மேம்பாலத்திற்காக கூவத்தில் கட்டப்படும் பணிகள் முடிக்கப்படும். அதனை தொடர்ந்து இதர பணிகள் நடைபெறும். அதேபோல் பணிகள் நடைபெறுவதால் மட்டுமே கட்டுமான கழிவுகள் உள்ளதாக தெரிகிறது. ஆனால் பணிகள் முடிந்தவுடன் முழுவதுமாக அகற்றப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் முதல் தலைமன்னார் வரை கடல் வழிப்போக்குவரத்து அமைக்கப்பதற்காக அய்அய்டி மூலம் திட்டஅறிக்கை தயாரிக்கப் பட்டு வருகிறது. இதற்காக ரூ.130 கோடி தேவைப்படுகிறது. எனவே ‘சாகர்மாலா திட்டம்’ மூலம் நிதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக ஒன்றிய அமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பூஞ்சேரி முதல் எண் ணூர் வரை கடல்வழி மார்க்கமாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 9 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 3 கட்டமாக நடந்து வருகிறது. எந்த ஒரு பணியும் 85 சதவீதம் நிலம் எடுப்பு பணிகள் முடிந்தால் மட்டுமே கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான பணி ஒப்பந்தம் தொட ங்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரர்
களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. கடலூர் பசுமை துறைமுகம் அமைப்பதற்கான நிலஎடுப்பு பணி களும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *