பெரியார் மருந்தியல் கல்லூரி – சினிகார்ன் லேப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இருநாள் பயிற்சிப்பட்டறை

2 Min Read

திருச்சி, செப். 20- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் Personalised Genetics for Drug Design என்ற தலைப்பிலான இருநாள் பயிற்சிப்பட்டறை 09.09.2025 முதல் 10.09.2025 வரை மூலிகை மருந்தியல் துறை சார்பில் நடைபெற்றது. முன்னதாக 09.09.2025 அன்று காலை 10 மணியளவில் பெரியார் மருத்தியல் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி Scinicorn Labs Pvt. Ltd., நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை மற்றும் Scinicorn Labs Pvt. Ltd., நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் முனைவர் ஏ. ரொனால்டோ அனுஃப் ஆகியோர் மருந்தியல் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் இணைந்து செயல்படுதல், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பயிற்சி, ஆலோசனை மற்றும் வாய்ப்புக்களை உருவாக்குதல் தொடர்பான மருந்தியல் ஆய்வுகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தினை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமையில் தனிப்பட்ட மரபியல் மற்றும் மருந்து வடிவமைப்பு குறித்த பயிற்சிப்பட்டறை தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது. Scinicorn Labs Pvt. Ltd., நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் முனைவர் ஏ. ரொனால்டோ அனுஃப் அவர்கள் ஒரே மருந்து அனைவருக்கும் என்ற பழைய முறையிலிருந்து விலகி ஒவ்வொருவரின் மரபணு வேறுபாடுகளைப் பொறுத்து மருந்துகளை வடிவமைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப யுக்திகளை மாணவர்களுக்கு விளக்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோட கிருஷ்ணமூர்த்தி, மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் ச ஷகிலா பானு ஆகியோர் முன்னிலை வகித்த இப்பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவிற்கு முனைவர் சி. விஜயலெட்சுமி அவர்கள் நன்றி கூறினார். மூலிகை மருந்தியல் துறை பேராசிரியர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்த இப்பயிற்சிப் பட்டறையில் இளநிலை மற்றும் முதுநிலை மருந்தியல் மாணவர்கள் 33 பேர் பங்கு கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *