நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

1 Min Read

கோவை, செப். 13- தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், கோவையில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.

சென்னை, வியாசா்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், கோவை, சித்தாபுதூரில் ரூ.14.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 112 குடியிருப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்று, 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, உதவி ஆணையா் முத்துசாமி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாகப் பொறியாளா் திரு.ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒவ்வொரு குடியிருப்பும் ஒன்றிய அரசின் மானியம் ரூ1.50 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ.7 லட்சம் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.

இதில், ஒவ்வொரு பயனாளியும் பங்களிப்புத் தொகையாக ரூ.4,63,839-யை வாரியத்துக்கு செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *