கடலூர், செப். 12- கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 7.9.2025 அன்று மாலை 6:30 மணிக்கு வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் கழக காப்பாளர் அரங்கு பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் மாவட்டத்தின் சார்பாக தனி வாகனத்தில் திரளான தோழர்கள் கலந்து கொள்வது எனவும் அதற்காக சுவர் விளம்பரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது
பெரியார் உலகத்திற்கு பெரு மளவில் நிதி திரட்டி தருவது என தீர்மானிக்கப்பட்டது தமிழர் தலைவர் இடத்தில் அனுமதி பெற்று தமிழர் தலைவர் தலைமையில் நிதி அளிப்பு விழாவை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழா பெரியார் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட முழுவதும் சிறப்பாக நடத்துவது என்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
விடுதலை சந்தா சிறப்பாக சேர்த்து தருவது என தீர்மானிக்கப் பட்டது.
நிகழ்வில் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி, மாவட்டத் துணைத் தலைவர் சி.மணிவேல், மாநில பகுத்தறிவாளர் கழக துணை அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம், ஆடுர் அகரம் கனகராசு, வடலூர் நகர தலைவர் புலவர் சு.ராவணன், வடலூர் நகர அமைப்பாளர் நா.முருகன், மருவாய் ஏ.திருநாவுக்கரசு, வடக்குத்து ந.கனகராசு, குறிஞ்சிப்பாடி சுமலதா, வடக்குத்து கிளை செயலாளர் இரா.கண்ணன், சாத்திப்பட்டு இரா.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட மாணவர் கழக தலைவராக சிவபாண்டியன், செயலாளராக அபினேஷ் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். முடிவில் வடக்குத்து தலைவர் தங்க பாஸ்கர் நன்றி கூறினார்.