தந்தை பெரியார் சிலை அமைத்திட வேண்டி முதலமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டது

1 Min Read

உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து பெருமை படைத்த நம் முதலமைச்சர் ஒசூர் மாநகருக்கு நேற்று (11.9.2025) அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த போது மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்றி தெரிவித்தும்,ஓசூரில் தந்தை பெரியார் சிலை அமைத்திட வேண்டியும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

முதலமைச்சர் அவர்கள் கழகத் தோழர்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.இந் நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் தலைவர் சு.வனவேந்தன், கழக பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி,துணைச் செயலாளர்கள் இரா.ஜெயசந்திரன்,ச.எழிலன், மாநகர தலைவர் து.ரமேஷ், மேனாள் திராவிடர் கழக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தி.பாலகிருஷ்ணன்,திருவெட்டியூர் நகர தலைவர் துரை இராவணன், திருவையாறு சுரேஷ்,எக்சைடு சதிஷ், கரூர் சிவாஜி, மக்கள் அதிகாரம் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், டி.மதியழகன் டி.ராமசந்திரன் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *