பெரியார் கல்வி நிறுவன 8ஆம் வகுப்பு மாணவி எஸ்.தீபிகா தமிழ்நாடு அணியின் சார்பில் விளையாடுவதற்குத் தேர்வு

1 Min Read

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, செப்.10- தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி த்துறை மற்றும் இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் (SGFI) இணைந்து நடத்திய மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  07.09.2025 அன்று நடைபெற்றது.

இதில் 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி எஸ்.தீபிகா மிகச் சிறப்பாக விளையாடி, மாநில அளவில் தமிழ்நாடு அணியின் சார்பில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மாணவியின் இச்சாதனைக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் டேக்வாண்டோ சாதனை

திருச்சி, செப்.10-திருச்சி மாவட்ட டேக்வாண்டோ பயிற்சிக் குழுமம் மற்றும் அருணா விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மய்யம் ஆகிய அமைப்புகள் இணைந்து,  மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளைக் கடந்த 06.09.2025 மற்றும் 07.09.2025 ஆகிய இரண்டு நாட்கள்,  திருச்சி புத்தூரில் நடத்தின.

இந்தப் போட்டிகளில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பாக விளையாடி மாவட்ட அளவில் அளப்பரிய சாதனைகள் படைத்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மூன்றாம் வகுப்பு மாணவன் பி.ஆரிஸ் அக்ரம், ஆறாம் வகுப்பு மாணவி சி.ஆதன்யா, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கே.சிறீ ஹரி ராம், மற்றும் எஸ். அமல், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி எஸ்.ஹரிணி ஆகியோர் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், நான்காம் வகுப்பு மாணவன் கே.சி. வர்ஷித் மூன்றாம் இடத்தோடு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *