செங்கல்பட்டு கே.ஆர்.லோகநாதன் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

1 Min Read

செங்கல்பட்டு மாவட்ட  பகுத்தறிவாளர் கழக  செயலாளர் குழல் லோ.குமரனின் தந்தையார் கே.ஆர். லோகநாதன் (வயது 84) 7.9.2025 அன்று மாலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார்.

8.9.2025 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற இறுதி நிகழ்வில்  கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில்  திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.செம்பியன்,  மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன்,  பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சே.சகாயராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மு.அருண்குமார்,  மறைமலைநகர் நகர திராவிடர் கழக தலைவர் திருக்குறள் வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்ட துணை செயலாளர் முருகன், மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றம் செயலாளர் ம.சமத்துவமணி, திருவள்ளுவர் மன்றம் பொறுப்பாளர் பழனி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

குறிப்பு: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசியில் குழல் லோ.குமரனுக்கு ஆறுதல்  தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *