முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வெற்றி டோக்கியோவில் ரூ.818 கோடியில் ஆறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, மே 30 – டோக்கியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானை சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக் கான புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் மேற்கொள்ளப்பட்டுள் ளன.

தமிழ்நாட்டில் 2024 ஜன வரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட் டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று உள்ளார். சிங்கப்பூர் பய ணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றுள்ள அவர், அங்கு முதலீட்டாளர்கள் மற் றும் ஜப்பான் நிறுவனங்களின் நிர்வாகிகள், உயர் அதிகாரி களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) சார்பில் நடத்தப்பட்ட நேற்று (29.5.2023) முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானை சேர்ந்த 6 தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ரூ.818.90 கோடி முதலீட்டுக் கான புரிந்துணர்வு ஒப்பந்தங் களை மேற்கொண்டுள்ளது.

6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் 

> காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் பரப்பில் ரூ113.90 கோடி முதலீட்டில் டிரக் வாகனங் களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான புதிய ஆலை நிறுவ கியோகுட்டோ சாட் ராக் நிறுவனத்துடன் ஒப்பந் தம்.

> திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள இருசக்கர, நான்குசக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் மிட்சுபா இந்தியா நிறுவன தொழிற்சாலையை ரூ.155 கோடியில் விரிவாக்கம் செய்ய மிட்சுபாவுடன் ஒப்பந்தம்.

> தமிழ்நாட்டில் கட்டுமா னம், கட்டுமான பொறியியல் மற்றும் அதுதொடர்பான வணிகத்தை மேற்கொள்ள ஷிமிசு நிறுவனத்துடன் ஒப் பந்தம்.

> பாலிகார்பனைட் தாள், கூரை அமைப்புகள், கட்டு மானத் துறையில் பயன்படும் எலெக்ட்ரானிக் கூறுகளுக் கான எக்ஸ்ட்ரூஷன் லைன்கள் தயாரிக்க ரூ.200 கோடி முத லீட்டில் தொழிற்சாலை நிறுவ பாலிஹோஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான கோயீ நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

> விண்வெளி, பாதுகாப்பு, கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற் சாலையை ரூ.200 கோடி முத லீட்டில் நிறுவ சடோஷோஜி மெட்டல் ஒர்க்ஸ் நிறுவனத் துடன் ஒப்பந்தம்.

> சோலார், எஃகு ஆலைகள், விண்வெளி, குறைகடத்தி தொழில்களுக்கான துருப் பிடிக்காத எஃகு நெகிழ்வு குழல்களை உற்பத்தி செய்வதற் கான ஆலையை ரூ.150 கோடி யில் நிறுவ டஃப்ல் நிறுவனத் துடன் ஒப்பந்தம்.

இந்த 6 நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் கியோகுட்டோ சாட்ராக், மிட்சுபா, ஷிமிசு, கோயீ, சடோ ஷோஜி மெட்டல் ஒர்க்ஸ், டஃப்ல் நிறுவனங்களின் அதி காரிகள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *