தனக்கென்று வந்தால்தான் தலைவலி தெரியுமோ? கூகுள் நிறுவனத்திற்கு ரூ 31,000கோடி அபராதம்! டிரம்ப் கண்டனம்!

2 Min Read

வாசிங்டன், செப். 9- கூகுள் நிறுவனத்துக்கு அய்ரோப்பிய யூனியன் 3.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 31,000 கோடி) அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் வர்த்தக போட்டிக்கான சட்டங் களை மீறி செயல்பட்டதாக கூறி அந்த நிறுவனத்துக்கு 3.5 பில்லியன் டாலர் அபராதத்தை அய்ரோப்பிய யூனியன் விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளத்தில் கூறியுள்ளதாவது:

அய்ரோப்பா இன்று அமெரிக்கா வின் மற்றொரு மிகச் சிறந்த நிறு வனமான கூகுளுக்கு 3.5 பில்லியன் டாலர் அபராதம் விதித்து அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது மிகவும் நியாயமற்றது.

அமெரிக்காவில் வரி செலுத்து வோர் ஒவ்வொருவரும் அய்ரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கையை ஆதரிக்க மாட்டார்கள். எனது நிர்வாகம் முன்பு கூறியது போல இதுபோன்ற பாரபட்சமான செயல்களை நிலைநிறுத்த ஒருபோதும் அனுமதிக்காது. இந்த அபராதத்தை திரும்பப் பெறாவிட்டால் வரிகள் மூலம் பதிலடி தரப்படும்.

ஆப்பிள் நிறுவனமும்…

இதேபோன்றதான் ஆப்பிள் நிறுவனமும் 17 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்னைப் பொருத்தவரை அந்த அபராதம் வசூலிக்கப்படக் கூடாதது.

அவர்கள் தங்களது பணத்தைத் திரும்பப் பெற இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனை நாம் அனுமதிக்கமுடியாது. அப்படி நடந்தால், வரி செலுத்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்ய பிரிவு 301 நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ-க்களை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் அண்மையில் சந்தித்தார். இந்த நிலையில், கூகுளுக்கு ஆதரவாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

அபராதம் ஏன்?

கூகுள் தனது அளவு மற்றும் ஆதிக்கத்தை பயன்படுத்தி காட்சி விளம்பர வணிகத்தைக் கட்டுப் படுத்துவதன் மூலம் சட்டங்களை மீறி செயல்பட்டுள்ளது. மேலும், கூகுள் விளம்பர தொழில்நுட்பத்தின் போட்டியாளர்களுக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூகுளுக்கு அபரா தத்தை 27 நாடுகளின் கூட்டமைப்பான அய்ரோப்பிய யூனியன் விதித்துள்ள தாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *