கூட்டணி கட்சிகளை பிளவுபடுத்தி கூறு போடுவது பா.ஜனதாவின் வழக்கம் செல்வப் பெருந்தகை பேட்டி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை செப்.9- கூட்டணிக் கட்சிகளை பிளவு படுத்தி, கூறு போடுவதுதான் பாஜகவின் வழக்கம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கூறுபோடும் பணி

சென்னையில் நேற்று (8-9-2025) அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்போம் என்று பேசியிருக்கிறார். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்தது. 4 ஆண்டுகள் இவர் முதலமைச்சராக இருந்தார். அப்போது ஏன் வாய் திறக்கவில்லை. இவர் செய்வது சந்தர்ப்பவாத அரசியல். முத்துராமலிங்க தேவர் மீது எந்த பற்றும் பழனிசாமிக்கு கிடையாது.

செங்கோட்டையன் விவகாரம் அவர்களுடைய உட்கட்சி பிரச்சினை. பாஜக எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ அந்தக் கட்சியை பிளவு படுத்தி, கூறு போடுவது தான் வழக்கம். மகாராஷ் டிராவில் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை பிரித்தது போல பாஜக எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கட்சியை பிளவுபடுத்தி கூறு போடும் பணியை செய்து வருகிறது. இவ்வாறு கூறினார். முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை என மக்கள் மீது திணிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாக்குரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. அந்த உரிமையை கூட கொடுக்காமல் வாக்கு திருட்டில் தேர்தல் ஆணையமும், பாஜகவும் ஈடுபடுகின்றன.

ஒவ்வொரு மாநிலத்தி லும் கடைக்கோடி நிலையி லிருந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். இளைஞர்கள் அதிக அளவில் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலிமை பெற்று வருகிறது.  கருநாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வலிமையாக உள்ளது. கேரளா வில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு
தொழில் பழகுநர் பயிற்சி

சென்னை, செப்.9- தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: ஒன்றிய அரசின் தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல அலுவலகத்துடன் இணைந்து மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பொறியியல் பட்டதாரிகளுக்கும் பொறியியல் டிப்ளமோதாரர்களுக்கும் ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சி (அப்ரண்டீஸ்) அளிக்கப்பட உள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் அல்லது ஆட்டோமொபைல் படித்திருக்க வேண்டும். கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் படித் தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி https://nats.education.gov.in விண்ணப்பிக்க கடைசி நாள் அக். 16ஆம் தேதி ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் பழகுநர் பயிற்சி பெறுவோருக்கு மாதம் தோறும் ரூ.18 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்தவுடன் தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் சான்றிதழ் பெறலாம். தொழில் பழகுநர் சான்றிதழ் சில அரசு பணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *