சென்னை, செப்.5- பணியிடத்தில் கண்டெ டுத்த தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப் படைத்த துப்புரவு பணியாளரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டிய துடன் வெகுமதியும் வழங்கினார்.
தங்கச் சங்கிலி
சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். பெயிண்டர். ராமச்சந்திர னின் மனைவி கிளாரா, திருவான்மியூர் பகுதி 180ஆவது வார்டில் தூய் மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த இணையருக்கு சூசைமேரி (18), சுவாதி (13), நிக்கிதாசிறீ (10) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். துப்புரவு பணியாளரான கிளாரா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது கீழே கிடந்த 1 பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து, காவல் நிலையத்தில் நேற்று (4.9.2025) ஒப்படைத்தார்.
நேர்மைக்கு பாராட்டு
இந்த செய்தியை அறிந்த துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், துப்புரவுப் பணியாளர் கிளாராவை குடும்பத்துடன் தனது முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து அவ ரின் நேர்மையை பாராட்டினார். மேலும் புத்தாடையும், தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் வெகுமதியும் வழங்கி அவரது நேர்மை யான பணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
துப்புரவுப் பணியா ளர் கிளாராவின் குடும்பத்தினருடன் உரையாடிய உதயநிதி ஸ்டாலின், லண்டனில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை அழைத்து, பாராட்டு தெரிவிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்தார் என்றும், தமிழ்நாடு திரும்பியதும், உங்களை (துப்புரவுப் பணியாளர் கிளாராவை) நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும்,கிளாரா குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.