வேளாண் பல்கலை உருவான நாள்!

Viduthalai
1 Min Read

அரசியல், தமிழ்நாடு

இதே நாளில் ’52 ஆண்டு களுக்கு’ முன்பு (1.6.1971)  முத்தமிழறிஞர் கலைஞரின் சீரிய சிந்தனையால் உரு வானது தான் கோவை மாநகரில் அமைந்துள்ள ”தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம்”.  

வேளாண்மைத்துறை முன்னேற்றத்தில் இப்பல் கலைக் கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாட்டில் வேளாண்மை துறையின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமே முழுமுதற் பொறுப்பு என்றால் மிகையாகாது. இப்பல்கலைகழகம் வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவைகள் போன்ற வைகளை வழங்குகிறது. மேலும் வேளாண்மையில் நடைமுறையில் மற்றும் வருங்காலத்தில் தோன்றும் சவால்களைச்  சந்தித்து உயர்தர மனித வளத்தை உரு வாக்குகின்றது. அதோடு இல்லாமல் ஆயிரக்கணக்கான உழவர்களுக்கு  மற்றும் விரிவாக்கத்துறை அலுவலர் களுக்கு மேம்படுத்தப்பட்ட பண்ணைத் தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

 மேலும் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கு திறமையான பயிற்சி மற்றும் பயனீட்டாளர்களுக்கு சேவையும் தருகிறது. அரசிடமிருந்தும் பல திட்டங் களைப் பெற்று திறம்பட செயல்படுத்திக் கொண்டி ருக்கிறது.

இந்திய வேளாண்மையில் ஒரு வியத்தக மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாற்றங்கள் வளர்ந்து கொண்டி ருக்கும் தேவையைப் பூர்த்தி செய்ய உலகமயமாக்கல் மற்றும் வேளாண் பொருட்கள் சம்பந்தமான ஏற்று மதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இந்த வழியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அறிவியல் சார்ந்த முன்னேற்றத்திற்கும், மற்றும் உழவர்களின் வாழ்க்கை தரத்தைத் உயர்ததுவதற்கும் ஒரு வழி காட்டியாகவும் திகழ்கின்றது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *