ஜாதி ஒழிப்பு வீரர் தத்தனூர் துரைக்கண்ணு மறைந்தாரே!

1 Min Read

அரசியல்

ஜாதி ஒழிப்புக்காக அர சியல் சட்டத்தை எரித்து 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த மாவீரர்  அரிய லூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியம் தத்தனூர் துரைக்கண்ணு (வயது 91) இன்று (1.6.2023) காலை இயற்கை எய்தினார். 

அவரது இறுதி நிகழ்ச்சிகளை கழகத்தோழர்கள் தான் செய்ய வேண்டும் என்று அவர் குடும்பத்தின ரிடம் உறுதியை பெற்றுள்ளார்.

இன்று (1.6.2023) மாலை தத்தனூர் கடைவீதியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு, இறுதி நிகழ்வு நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் முன்னிலையில் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் திரண்டு இறுதி மரியாதை செலுத்தினர். 

கடந்த 26. 11.2022 அன்று ஜாதி ஒழிப்பு மாவீரர் நாளில் அவருக்கு அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *