மேனாள் குடியரசுத் துணைத் தலைவரின் பரிதாப நிலை! சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் பெற ஜகதீப் தன்கர் விண்ணப்பம்!

1 Min Read

புதுடில்லி, செப்.1- ஜூலை 21ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக தன்கர் பதவி விலகினார்.

உடல்நலக் காரணங் களுக்காகத் தான் பதவி விலகியதாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் பதவி விலகச் செய்ய கட்டாயப் படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில், மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப் பேரவை செயலரிடம் விண்ணப்பித்துள்ளார்.

சட்டப்பேரவை செயலகம் இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகவும், குடியரசுத் துணைத் தலைவர் பதவி விலகிய தேதியிலிருந்து ஓய்வூதியம் பொருந்தும் என்று சட்டப் பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1993 -1998 வரை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019இல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *