திராவிட மாடல் ஆட்சியில் 6,540 அரசுப் பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம்!

2 Min Read

சென்னை, ஆக.26- 6,540 அரசுப் பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மாநில கல்விக்கொள்கை

2021இல் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டு குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெற வேண்டும் என பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் எதிர்காலத்தை நோக்கிய ஒரு துணிச்சலான முன்னெடுப்பாக தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாடு, மொழி மற்றும் சமூக மரபு ஆகியவற்றை உள்ளடக்கி முற்போக்குடைய ஒரு விரிவான குழந்தை மய்ய பார்வையை கொண்டதாக அமைந்துள்ளது.

எண்ணும் எழுத்தும்

கரோனா கால கற்றல் இடை வெளியை நிறைவு செய்திடும் நோக்கில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம் தான் இல்லம் தேடி கல்வி திட் டம். இந்த திட்டத்துக்கு 2025-2026 கல்வியாண்டில் ரூ.44.14 கோடி ஒதுக்கீட்டில் செயல்பட்டு வரும் 34 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்களில் 5 லட்சத்து 986 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடையே அடிப் படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தவும், ஒவ்வொரு குழந்தையும் 2025ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணித திறன்கள் அடை வதை உறுதி செய்யவும் நடைமுறைப்படுத்தப்பட்ட “எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் மூலம் 37 ஆயிரத்து 767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 25.08 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.

பள்ளிகளில் இணைய சேவை

தமிழில் சரளமாக வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடையே உறுதி செய்யும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட வாசிப்பு இயக்கத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 44.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

28 ஆயிரத்து 67 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் அதிவேகமான இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஆயிரத்து 540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.352.42 கோடியில் 44 மாதிரி பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களிடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்த 28 மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலினின் சிறப்புத் திட்டமாக 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கையடக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

பன்முக வளர்ச்சியினை வெளிப் படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது, அரசின் திட்டங்கள் அனைத் தையும் சிறப்பாக செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது ஆகியவற்றுடன் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி செலவினத்திற்கான உதவித்தொகை ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *