சி.பி.அய். முதுபெரும் தலைவர் எஸ். சுதாகர் ரெட்டி மறைவு நமது ஆழந்த இரங்கல், வீர வணக்கம்!

1 Min Read

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்..)யின் மூத்த தலைவரும், மேனாள் தேசியப் பொதுச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி, வாழ்நாள் போராளியாகவே வாழ்ந்து, அவ்வியக்கத்தினை வழி நடத்தும் குழுவின் ஆற்றல் மிகு தலைவராகவும் திகழ்ந்து – தொண்டாற்றியத் தோழர் எஸ். சுதாகர் ரெட்டி அவர்கள்  (வயது 83) இயற்கையெய்திய (22.8.2025) செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது திருப்பூரில் நாங்கள் இருவரும் ஒரே மேடையில்  (தேர்தல் பிரச்சாரம்) பேசினோம். பா.ஜ.க., ஹிந்து முன்னணியினர் கலவரம் செய்து இடையூறு செய்த  நிலையிலும் கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது – ஒரு பசுமை நினைவு!

அவரது மறைவு கொள்கைப் பொது வாழ்வுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.

அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்தவருக்கும், திராவிடர் கழகம் சார்பில் ஆறுதலும், மறைந்தவருக்கு இரங்கலும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வீர வணக்கம் செலுத்துகின்றோம்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை     

24.8.2025     

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *