ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் எறிபந்து மற்றும் இறகு பந்து போட்டியில் வெற்றி

1 Min Read

பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து மற்றும் இறகு பந்துப் போட்டிகள் அரியலூரில் உள்ள எஸ்டிஏ.டி. விளையாட்டு மைதானத்தில் 20.08.2025 அன்று நடைபெற்றது. அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடமும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மூன்றாம் இடமும் மற்றும் இறகு பந்து போட்டியில் மாணவிகள் 19 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவுகளில் கலந்துகொண்டு மூன்றாம் இடமும் பிடித்தனர். போட்டியில் வென்ற வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர். ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *