ரோஜா முத்தையா நூலகத்தில் அரிய நூல்கள் காட்சியைப் பார்வையிட்டு ‘‘அகஸ்தியர்; ஒரு மீள் பார்வை’’, ‘‘கருநாடக இசை என்னும் தமிழர் இசை’’ நூல்களைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்!

1 Min Read

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்றுவரும் ‘‘அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சி’’யில் அரிய புத்தகங்களின் காட்சியைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பார்வையிட்டு, அங்கிருந்த அரிய புத்தகங்கள்பற்றி தமது நினைவுகளை, கருத்துகளை நூலக இயக்குநரிடம் தெரிவித்தார். அரிய முயற்சிகளுக்காகப் பாராட்டினார். தமிழர் தலைவர் அவர்களை, ஆர்.பாலகிருஷ்ணன் (அய்.ஏ.எஸ். ஓய்வு), பேராசிரியர் அமுதா பாண்டியன் ஆகியோர் வரவேற்று புத்தகங்களை வழங்கினர். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணனின் ‘‘அகஸ்தியர்; ஒரு மீள் பார்வை’’, அமுதா பாண்டியனின் ‘‘கருநாடக இசை என்னும் தமிழர் இசை’’ ஆகிய நூல்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டார். உடன் நூலக இயக்குநர் சுந்தர்கணேசன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 19.8.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *