மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

1 Min Read

மேட்டூர், ஆக. 18-  காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

அணைக்கு நேற்று முன்தினம் (16.8.2025) 6,408 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று (17.8.2025) 6,223 கனஅடியாக குறைந்தது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நீர்திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடியாகவும், மாலையில் 22,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 118.25 அடியாகவும், நீர் இருப்பு 90.70 டிஎம்சியாகவும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 13ஆம் தேதி காலை 6 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக பதிவானது. இரவு 7 மணியளவில் 9,500 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. அதேபோல, கடந்த 14ஆம் தேதி காலை விநாடிக்கு 6,500 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. அன்று முதல் நேற்று மாலை வரை விநாடிக்கு 6,500 கனஅடியாகவே நீர்வரத்து தொடர்கிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *