முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சில நாள்கள் மருத்துவமனையில் இருந்து நலம் பெற்றுத் திரும்பிய, ஓய்வறியா பணிக்கு மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
உடல்நலம் குன்றி (காது தொற்றுப் பிரச்சினை தொடர்பாக) அறுவைச் சிகிச்சை பெற்று, தமது பொதுவாழ்வைத் தொடரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2025) ஆசிரியரின் அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்து, சிறிது நேரம் உரையாடி சென்றார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு வந்து நலம் விசாரித்தனர்.