பட்டாசு வெடிப்பு எதிரொலி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

1 Min Read

சென்னை, நவ.11  தீபாவளி யையொட்டி பல்வேறு பகுதி களில் மக்கள் தற்போதே பட் டாசு வெடிக்கத் தொடங்கி விட்டனர். அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து வரு கிறது.

இந்நிலையில், சென்னை யில் காற்று மாசு அதிகரித் துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நேற்று (10.11.2023) இரவு முதலே பட் டாசு வெடிக்கத் தொடங்கி யுள்ளதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக் குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னை யில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்குச் சென் றுள்ளது.

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் காற்று மாசின் தரம் 230 ஆக உயர்ந் துள்ளது. காற்று மாசின் தரம் பெருங்குடியில் 169, அரும் பாக்கத்தில் 134, வேலூரில் 123, ராயபுரத்தில் 121, கொடுங்கை யூரில் 112 ஆக உயர்ந்துள்ளது.

காற்று மாசு அதிகரிப்பால் ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரிய வர்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *