சோழபுரம் கலியன் பிறந்த நாள் கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

1 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் –  அய்.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான சோழபுரம் கலியன் அவர்களின் 88ஆம் (1.6.2023) ஆண்டு பிறந்தநாள் சிறப்பாக நடைபெற்றது. பிறந்தநாள் கண்ட சோழபுரம் கலியனிடம் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

அவரது இல்லத்திற்கு கழகத் தோழர்கள் நேரிடையாக சென்று “விடுதலையால் விடுதலை” நூல் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமியிடம் சோழபுரம் கலியன் ஆறு மாத விடுதலை சந்தா வழங்கினார். குடந்தை மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணியின் தலைவர் த.ஜில்ராஜ் உடன் இருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *