ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

9.6.2023

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அத்வானியின் ரதத்தை லாலு தடுத்தார், மோடியை நிதிஷ் குமார் தடுப்பார் என தேஜஸ்வி கருத்து.

* தனி பட்ஜெட் நடைமுறையை நிறுத்துவதன் மூலம் ரயில்வேயை பாஜக அழித்துவிட்டது ரயில் விபத்தின் பின்னணியில் உள்ள உண்மையை அடக்குவதில் ஒன்றிய பாஜக அரசு மும்முரமாக இருப்பதாக மம்தா குற்றச்சாட்டு.

* ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் பற்றிய அத்தியாயம் கருநாடக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் மது பங்காரப்பா தலைமையில் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த கூட்டத்தில் முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* துருக்கி தேர்தல் கூறும் செய்தி. இந்தியாவில் எதிர்க்கட்சிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியை வழங்குவதற்கான ஒரு கட்டாயத் திட்டத்திற்கு பின்னால் ஒன்றுபட முடியாவிட்டால், 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபியை அகற்றுவதற்கான வாய்ப்பு கடினமாகும் என்கிறார் லண்டன் நகரை சேர்ந்த ரமேஷ் வெங்கட்ராமன்

தி இந்து:

* மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு செங்கோல் கொடுத்ததில் என்ன பயன்? எல்லா அதிகாரங்களையும் ஒப்படைத்துவிட்டு அவர் இந்தியாவை விட்டு வெளி யேறினார் என்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை மடத்தின் ஆதீனம் பேச்சு

தி டெலிகிராப்:

* தன்னைச் சந்தித்த ஓபிசி, சிறுபான்மை, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களின் தலைவர்கள் குழுவிடம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும், சமூக-பொருளா தார மற்றும் கல்வி கணக்கெடுப்பை அமல்படுத்தவும் தனது அரசு உறுதியாக இருப்பதாக கருநாடக மாநில முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

* பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க மனுஸ்மிருதியை – குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதி மேற்கோள் காட்டி தீர்ப்பு

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மருத்துவ முதுநிலை படிப்பில் சேர அடுத்த ஆண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வை எம்.பி.பி.எஸ். மாணவர்கள் எழுத வேண்டுமாம்

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *