கழகக் களத்தில்…!

2 Min Read

5.8.2025 செவ்வாய்க்கிழமை
கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

குடந்தை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகரத் தலைவர்) * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: க.குருசாமி (மாநில எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) * பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு, பிரச்சார பணிகள் * நன்றியுரை: க.சிவக்குமார் (குடந்தை மாநகர செயலாளர்) * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம். * இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை (கழக) மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை (கழக) மாவட்டச் செயலாளர்).

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு

சென்னை: முற்பகல் 11 மணி மணி * இடம்: தமிழ்த்தாய் ஊடக அரங்கு, மய்யத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை * வரவேற்புரை: நா.அருண் (மேனாள் நிறுவன மாணவர்) * தலைமையுரை: கோபிநாத் ஸ்டாலின் (இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * நோக்கவுரை: முனைவர் மணிகோ.பன்னீர்செல்வம் (பொறுப்பாளர், பாவேந்தர் பாதிதாசன் ஆய்விருக்கை) * சிறப்புரை: த.மனோ தங்கராஜ் (பால்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு) * பொருண்மை: தென் தமிழகத்திற்குத் திராவிடம் வந்தது, பாரதிதாசன் இயல் நோக்கு * நன்றியுரை: ம.குணா மகேஷ்வரன் (முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * தொகுப்புரை: மு.சந்தோஷ் (ஒருங்கிணைந்த முதுகலை அய்ந்தாமாண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * பாரதிதாசன் பாடல்கள்: பண்ணிசை முருகன்.

9.8.2025 சனிக்கிழமை
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் புத்தக அறிமுக உரை

தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: இரா.ஆழ்வார் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இ.ஞா.திரவியம் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: மோ.அன்பழகன் (திமுக இலக்கிய அணி), சீ.மனோகரன் ப.க. * பொருள்: ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள கோவில்கள் தோன்றியது ஏன்? புத்தகம் அறிமுக உரை மா.பால்ராசேந்திரம் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *