கார் விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்ட ஏழு தமிழர்களுக்கு சிங்கப்பூர் அதிபர் பாராட்டு

1 Min Read

சிங்கப்பூர், ஆக. 2- சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று விழுந்தது. காரில் சிக்கி யிருந்த ஒரு பெண்ணை பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள் பத்திரமாக மீட்டனர். இந்தப் பாராட்டத்தக்க செயலுக்காக அவர்களுக்குப் பொதுமக்கள் மத்தி யில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.

வீரர்களுக்கும் சிங்கப்பூர் அதிபர் சண்முகரத்தினம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர்களை நேரில் சந்தித்து உரையாடி, விருந்தளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

பிச்சை உடையப்பன் சுப்பையா (47)வேல்முருகன் முத்துசாமி (27)பூமாலை சரவணன் (28)கணேசன் வீரசேகர் (32)போஸ் அஜித் குமார் (26)நாராயணசாமி மாயகிருஷ்ணன் (25) சாத்தபிள்ளை ராஜேந்திரன் (56)

இவர்களைப் பாராட்டும் விதமாக, 1,639 பேர் இணைந்து 72,241 சிங்கப்பூர் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 44.5 லட்சம் ரூபாய்) பரிசாக அளித்துள்ளனர் எனப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொண்டு நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *