திருப்பூர் மாவட்ட கழக மகளிர் கலந்துரையாடல்

1 Min Read

அரசியல்

திருப்பூர், ஜூன் 12 – திருப்பூர் மாவட்டத்தில் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையா டல் கூட்டம் நேற்று (11.6.2023) நடைபெற்றது. 

நிகழ்வில்  மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கிருஷ்ணவேணி அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்திற்கு  மாவட்ட மகளிரணி தலைவர் யாழ் ஈசுவரி தலைமையேற்றார். இன்றைய சூழலில் சமூக சிக்கலை களைவதற்கு மகளிரின் பங்கு மிக முக்கியம் என்பதையும், அமைப்பாக இணைந்து பணியாற்றுவதின் அவசி யத்தையும் எடுத்து ரைத்து, மகளிரணி – மகளிர் பாச றையின் செயல்பாடுகள் பற்றியும் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை வழங்கினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட செயலாளர் குமரவேல் ஆகியோர் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கி முன்னிலையேற்று சிறப்பித்தனர்.வருகை தந்த மகளிர்  தோழர்கள்  தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். இறுதி யாக மோகன சுதா அனை வருக்கும் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *