ஆகஸ்ட் 1 முதல் சென்னை மெட்ரோவில் ‘சிங்கார சென்னை அட்டை’ கட்டாயம் பழைய அட்டைகள் மாற்றுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள்!

2 Min Read

சென்னை, ஜூலை 23-  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தனது பயண அட்டையிலிருந்து சிங்கார சென்னை அட்டைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. இது பயணிகளுக்கு மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் ஒரே அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் வசதியை வழங்கும்.

தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையான சிங்கார சென்னை அட்டை, CMRL பயண அட்டையுடன் கூடுதலாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், மாநகரப் பேருந்துகளிலும் இதை பயன்படுத்தும் திட்டம் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் பிறகு, சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 1 முதல், சென்னையின் 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படும். இருப்பினும், QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும். பயணிகள் தங்கள் பழைய CMRL பயண அட்டைகளில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிக்கப் பயன்படுத்தலாம்.

பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50க்கும் குறைவாக) அடையும் போது, பயணிகள் தங்கள் CMRL பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலைய பயணச் சீட்டு கவுன்ட்டர்களில் ஒப்படைத்து, எந்தக் கட்டணமும் இல்லாமல் சிங்கார சென்னை அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

பழைய அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே அட்டையில் மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வசதி இருப்பதால், அன்றாடம் 1,500க்கும் மேற்பட்டோர் புதிய சிங்கார சென்னை அட்டையை வாங்கி வருகின்றனர்.

பயணிகளுக்கு இந்த அட்டை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, கிண்டி, சைதாப்பேட்டை, ஆயிரம்விளக்கு உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பு அரங்குகள் அமைத்து புதிய அட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *