முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

1 Min Read

தி.மு.க. தலைவர், முத்தமிழ றிஞர்  கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க. முத்து அவர்கள் (வயது 77) இன்று (19.7.2025) காலை மறைவுற்றார் என்ற செய்தி பெரிதும் வருத்தத்திற்குரியதாகும்.

‘தமிழரெல்லாம் மானத்துடன்

வாழ்வதற்கு யார் காரணம்?

பெரியார் காரணம்’’ என்று அவர் பாடிய பாடல் புகழ் பெற்ற ஒன்றாகும். கழகக் கூட்டங்களில் எல்லாம் ஒலி  பரப்பப்படுவது வாடிக்கையாகும்.

புகழ் பெற்ற பாடகர் சிதம்பரம் செயராமனின் இசை வாரிசு என்று சொல்லத்தக்க வகையில் பேசப்பட்டவர்.

நமது மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சகோதரரும் ஆவார்.

திரைப்படத்துறையிலும் மு.க. முத்து அவர்கள் பயணித்தவர்; அவர்தம் பிரிவால் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை              

19.7.2025       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *