பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
மாநில, மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழக மாவட்டங்களை சேர்ந்த தகுதியான 5 தோழர்களை ஒவ்வொரு மாவட்டமும் பங்கேற்க செய்திடுமாறு அறிவுறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாள் : 23.08.2025 சனி மற்றும் 24.08.2025 ஞாயிறு
இடம்: விழுப்புரம்
வயது: 18 வயது முதல் 30 வயது வரை
பங்கேற்கும் கழக மாவட்டங்கள்:
விழுப்புரம், விருத்தாசலம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், பெரம்பலூர், அரியலூர்
இவண்
சோ.சுரேஷ், மாநில அமைப்பாளர்
பெரியார் சமுகக் காப்பு அணி, 9710944834