திருவண்ணாமலையா, அருணாசலமா?

1 Min Read

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயங்கும் பணிமனைகளில் திருவண்ணாமலை செல்லும்  பேருந்துகளில் அதன் பெயர் அருணாசலம் என்று மாற்றி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘‘இதை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி!  வழித்தட பலகை பெயர் இப்பொழுது திருவண்ணாமலை என்று திருத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்துப் பேருந்து களிலும் ஒரே மாதிரியான பெயர்களை உறுதி செய்ய அனைத்து பணிமனைகளுக்கும் கடுமையான அறிவிப்புகள்  பிறப்பிக்கப்பட்டுள்ளன’’ என்று கூறப்பட்டுள்ளது.

சிகிச்சை முடிந்து…

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கேரளா திரும்பினார்.

பூமிக்குத் திரும்பினார்…

பன்னாட்டு விண்வெளி நிலையம் சென்ற வீரர் சுபான்ஷூ பூமி திரும்பினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *