முற்றுகிறது ஹிந்தி எதிர்ப்பு மராட்டிய மொழிக்கு எதிராகப் பேசிய ஆட்டோ ஓட்டுநர் மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல்

1 Min Read

தானே, ஜூலை 14-  மராத்திக்கு எதிராக பேசிய ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சிவசேனா (உத்தவ் அணி) தொண்டர்கள் அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர்.

மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விரார் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வந்தார்.

அவர் சில நாட்களுக்கு முன் மராத்தி, மகாராட்டிரா, மராத்தி தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, விரார் ரயில் நிலையம் அருகே சாலையில், மராத்தி குறித்து அவதூறாக பேசிய ஆட்டோ ஓட்டுநரை பிடித்த சிவசேனா (உத்தவ் அணி) தொண்டர்கள், பெண் தொண்டர்கள், அவரது கன்னத்தில் அறைந்தனர்.

இதையடுத்து அவர் மராத்திக்கு எதிராக பேசியதற்காக மகாராட்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *