கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2 Min Read

13.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எதிரும், புதிரும்: என்டிஏ வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்: நான்காவது முறையாக அமித்ஷா பேட்டி; தமிழ்நாட்டில் அதிமுக தனித்து தான் ஆட்சி: எடப்பாடி பேட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 2029இல் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ளாட்சி தேர்தலில் 42 சதவீத இட ஒதுக்கீடு முக்கிய சாதனையாக திகழும், முதலமைச்சர் ரேவந்த் பெருமிதம்.

* ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதுதான் அண்ணல் அம்பேத்கரின் விருப்பம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு.

* விரைவில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேஜஸ்வி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு; ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் கண்டனம்: நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியில் “பீகாரிகள் இப்போது இன்னும் எத்தனை கொலைகளைச் சந்திப்பார்கள்? பீகார் காவல் துறையின் பொறுப்பு என்ன?” என கேள்வி.

தி டெலிகிராப்:

* யுஜிசியின் ராக்கிங் எதிர்ப்பு அமைப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்று டில்லி உயர் நீதிமன்றம் காட்டம். 2022 தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்சிஆர்பி) சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் தற்கொலைகளால் ஏற்படும் அனைத்து இறப்புகளிலும் மாணவர்கள் 7.6% – அல்லது 13,044 – ஆக உள்ளனர், இது விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த எண்ணிக்கையை விட அதிகமாகும்.

எகனாமிக் டைம்ஸ்:

* உ.பி. யோகிக்கு புது தலைவலி: உத்தரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒதுக்கீடு ஒட்டு மொத்த குரல்:  அடுத்த சட்டமன்றத் தேர்தல் இன்னும் சிறிது காலம் உள்ள போதிலும், உத்தரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான –  நிஷாத் கட்சி, எஸ்.பி.எஸ்.பி., அப்னா தளம்,  தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பாஜக ஆளும் உத்தரகாண்டில் போலி சாமியார்கள் (சாமியார்களே போலிதானே): இதுவரை 23 போலி சாமியார்கள் கைது. ‘ஆபரேஷன் காலனேமி’ என்ற மாநில அளவிலான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளதாம்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *