வேளாண்துறை மேம்பாட்டிற்கு புதிய தொழில் நுட்ப சேவை திட்டங்கள்

Viduthalai
1 Min Read

சென்னை, நவ.12 வேளாண் துறை வளர்ச்சிக்கான பண்ணை இயந்திரமயமாக்கலைப் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான வேளாண் வாகனங்களை தயாரித்து வழங்குவதில் சோனாலிகா நிறுவனம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

பெரியது மேம்பட்ட பண்ணைத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் ஹெவி டியூட்டி டிராக்டர் வரிசை பிராந்திய பன்முகத் தன்மையைத் தாண்டி விவசாயிகளின் செயல்திறனையும்  உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

சோனாலிகா, அதன் ஹெலி – டூட்டி டிராக்டர் வரிசையில் ஹெவி டியூட்டி தமாகா திட்டத்தின்கீழ் இதுவரை பார்த்திராத பருவகால சலுகைகளையும், புதிய தொழில் நுட்பங்களுக்கு விவசாய சமூகத்தை மேம்படுத்தும் வகையில் நிதி திட்டங்களையும் இந்நிறுவனம் நீட்டித்துள்ளது. அக்டோபர் 2023-இல் பதிவு செய்யப்பட்ட 18,002 ஓட்டு மொத்த டிராக்டர் விற்பனையும், இதுவரை இல்லாத வகை யில் அதிகபட்ச ஒட்டு மொத்த சந்தைப் பங்கான 15 சதவீதம் ஏப்ரல் – அக்டோபர் வரையிலான இந்த ஆண்டில் பெற்றுள் ளோம் என இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிªட்டின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *