பிஜேபி ஆளும் ஒடிசா மாநிலத்தின் அவல நிலை பிரசவ வலியால் துடித்த ெபண்ணை 10 கி.மீட்டர் தூரம் தூக்கிச் சென்றனர்

1 Min Read

புவனேஸ்வர், ஜூலை 8 ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனாய் போஜ். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 6.7.2025 அன்று பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் கைராபுட் அரசு சுகாதார மய்யத்தை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி கோரினர்.

இதையடுத்து போஜ்குடா கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் மோசமான சாலை காரணமாக துசாய் படா என்ற கிராமம் வரை மட்டுமே ஆம்புலன்ஸ் செல்ல முடிந்தது. சாலை சேறும் சகதியுமாக இருந்ததால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. இதுபற்றி அறிந்த கிராம மக்கள், கர்ப்பிணி சுனாய் போஜை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அதை துணி மூலம் மூங்கிலில் கட்டினர். பிறகு அந்தப் பெண்ணை 10 கி.மீ. தூரம் வரை தங்கள் தோளில் சுமந்து சென்று ஆம்புலன்ஸ் நிற்கும் இடத்தை அடைந்தனர். பிறகு அந்தப் பெண் கைராபுட் சுகாதார மய்யத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *