அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

Viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை,ஜூன்20 – சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடு விக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 15ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜியை பரிசோதித்து இரு மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையை சந்தேகிக்க முடியாது எனக் கூறி, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு குருதி நாளங்களில் அடைப்பு கண்டறியப்பட்டதால் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாளை அதி காலை பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *