அய்யப்பன் கோயிலில் ஊழியரே நகை திருட்டு!

Viduthalai
2 Min Read

திருவனந்தபுரம், ஜூன் 20 – சபரி மலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டது. இன்று (20.6.2023) வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. 

நடை திறக்கப் பட்டதை யொட்டி ஏராளமான பக்தர் கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி தேவஸ்தான ஊழியர் ஒருவர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் சன்னதியில் இருந்த காணிக்கைப் பெட்டியில் 10.95 கிராம் எடையிலான வளை யலை காணிக்கையாக செலுத்தி னார். 

ஆனால், இந்த வளையல் காணிக்கை வரவு கணக்கில் காட்டப்படவில்லை.  

கேமரா காட்சிகள் ஆய்வு

காணிக்கை பெட்டியில் போடப்பட்ட தங்க வளையல் காணாமல் போய் இருப்பது தேவஸ்தான அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இதுபற்றி சபரி மலை செயல் அதிகாரி லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தார்.  

அதைத்தொடர்ந்து காவல் துறையினர் கடந்த 18ஆம் தேதி சன்னிதானத்தில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய் தனர்.

தேவஸ்தான ஊழியர் கைது

அப்போது, சன்னிதானத்தில் காணிக்கை பெட்டியில் போடப் படும் காணிக்கைகள் பெல்ட் மூலமாக காணிக்கை சேகரிக்கப் படும் அறைக்கு செல்வதும், அங்கு வந்த வளையலை பணியில் இருந்த தேவஸ்தான ஊழியரான ரெஜி குமார் (வயது 45) என்பவர் திருடிய தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 

அந்தக் காட்சிகள் மூலம் காவல் துறையினர் ரெஜிகுமார் திருடி யதை உறுதிப்படுத்தினர்.  பின்னர், ரெஜிகுமாரின் அறையை காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது அவரது தலைய ணைக்கு அடியில் காணாமல் போன வளையல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

இதைதொடர்ந்து தேவஸ்தான லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறை யினர் ரெஜிகுமாரை கைது செய்து அவரை பம்பை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பம்பை காவல் துறையினர் அவரை ரான்னி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *