வேலூர் மாவட்ட கழக மகளிரணி – மகளிர் பாசறை நிர்வாகிகள் கலந்துரையாடல்

2 Min Read

குடியாத்தம், ஜூன் 21- வேலூர் மாவட்டம் திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 15/6/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு குடியாத்தம், புவனேஸ்வரி பேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெ.இந்திரா காந்தி வரவேற்புரை வழங்கினார்.

வேலூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.இராஜகுமாரி இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். திராவிட கழக மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் ந.தேன்மொழி சிறப்புரை  ஆற்றினார்.

மேலும் கழக பொதுக்குழு உறுப்பினர் ச.கலைமணி சிறப்பானதொரு கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் இரா.அன்பரசன், திராவிடர் கழகத்தின் வேலூர் மாவட்ட தலைவர் வி. இ.சிவகுமார், மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன், சத்துவாச்சேரி கு. இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் மு. சீனிவாசன், ப. க. மாவட்ட செயலாளர் வே.வினாயகமூர்த்தி, மாவட்ட ப. க. அமைப்பாளர் மா. அழகிரிதாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் இ. தமிழ்தரணி, குடியாத்தம் நகர அமைப்பாளர் வி. மோகன்,  காட்பாடி நகர தலைவர்  பொ. தயாளன், மாவட்ட ப. க. துணைத் தலைவர் பி. தனபால், நகர ப. க. தலைவர் ப. ஜீவானந்தம், மாணவர் கழகம் சி. சங்கநிதி ஆகியோர் தங்களுடைய கருத்துகளையும் வழங்கினார்கள். பெண்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் சமூக பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண வேண்டிய வழிமுறைகள் பற்றியும், மகளிர் அணியில் புதிய தோழர்களை பெருமளவில் சேர்த்தல், மாதந்தோறும் மகளிருக்கான கலந்துரையாடல் கூட்டம், கருத்தரங்கம் அமைத்தல், பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல் என இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. நிறைவாக கழக பொதுக்குழு உறுப்பினர் சி.லதா நன்றியுரை கூறினார்.

கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞர் அணி மற்றும் மாணவர் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

வேலூர் மாவட்ட மகளிரணி – மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், இரா. ராஜகுமாரி – மாவட்ட மகளிரணி தலைவர், பெ. இந்திராகாந்தி – மாவட்ட மகளிரணி செயலாளர், ச. கலைவாணி – மாவட்ட மகளிரணி துணைத்தலைவர், வீ. பொன்மொழி – மாநகர மகளிரணி தலைவர், ச. இரம்யா – மாவட்ட மகளிர் பாசறை தலைவர், தி. அனிதா – மாவட்ட மகளிர் பாசறை செயலாளர், த. தெய்வானை – மாநகர மகளிர் பாசறை தலைவர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *