எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பாட்னா புறப்பாடு

Viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூன் 22 2024-ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற் சியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வரு கிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க் கட்சிகளின் கூட்டம் நாளை (23.6.2023) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம் கலந்து கொள்ள இருப்பதாக நேற்று முன்தினம் (20.6.2023) நடைபெற்ற ‘கலைஞர் கோட்டம்’ திறப்பு விழாவில் அறிவித்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.6.2023) பீகார் செல்கிறார். இன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னா செல்ல உள்ளார். நாளை நடை பெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பிறகு, நாளை இரவு அங்கிருந்து சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் ராகுல்காந்தி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *