காவேரிப்பட்டணம், ஜூன் 18- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் காவேரிப்பட்டணம் கவுண்டப்பனூர் (பெ.செல்வம் இல்லத்தில்) 15/06/2025 அன்று மாலை 3.30 மணிக்கு ஒன்றிய கழகத் தலைவர் பெ.செல்வம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தொடக்கத்தில் கல்லூரி மாணவி செ.கலையரசி கடவுள் மறுப்பு கூறினார்.
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மேனாள் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, பொதுக் குழு உறுப்பினர் இல. ஆறுமுகம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா மற்றும் தோழர்கள் கலந்துக்கொண்டு பேசினர்
நிறைவாக இராமாபுரம் இரஞ்சித் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மேனாள் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிர மணியம், மாவட்ட ப.க.துணைச் செயலாளர் மா.சிவசங்கர் ஆகியோர் தலா ஒரு ஆண்டு விடுதலை சந்தாவும் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் வழங்கினர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் கிருட்டினகிரி என்.எஸ்.பிரபாவதி, ஓசூர் பேராசிரியர் கு.வணங்காமுடி, பெரிய புளியம்பட்டி ஆசிரியர் சின்னகண்ணன் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது .
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலை நாளிதழ் 91 -ஆம் ஆண்டில் தமிழர்களின் மானமீட்பு, சமூகநீதி, சமத்துவ மனிதநேய உரிமைக்காக நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் “விடுதலை”க்கு அதிக அளவில் சந்தாக்களை திரட்டி வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
பெரியார் உலகம் பெரும்பணிக்கு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கனவு திட்டமான திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் பெரும்பணிக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் நிதியைத் திரட்டி வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.