கழகத் தலைவருக்கு எடைக்கு எடையாக நாணயங்களும், அரிசியும்!

1 Min Read

கோபி மாவட்டத்தில் ஒரு மாநாடு போல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்   எடைக்கு எடை நாணயங்கள், அரிசி வழங்குகின்ற நிகழ்வும் நடைபெற்றது. மேடையில் பெரிய தராசு கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வீரியமான ஒலி முழக்கங்களுடன் அமர வைக்கப்பட்டார். இன்னொரு பக்கம் நாணயங்கள் அடங்கிய பைகள் வைக்கப்பட்டன. அந்த நாணயங்களின் மதிப்பு 30,000/- ரூபாய். இந்நிகழ்வை மாவட்டக் காப்பாளர் ந. சிவலிங்கம் ஒருங்கிணைத்தார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், இதுவரை ஆசிரியருக்கு எடைக்கு எடை கொடுக்கப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிட்டார். எடைக்குஎடை நாணயம் வழங்கப்படதற்குப் பிறகு எடைக்கு எடை அரிசி வழங்கப்பட்டது. முடிந்தவுடன் மாவட்டத் தலைவர்  சென்னியப்பன் ஆசிரியர் அவர்களின் எடைக்கு எடை வழங்கப்பட்ட அரிசி இங்கே ஏலம் விடப்படும் என்று  கூறி ஏலத் தொகை ரூ.3,000; உயர்த்தி கேட்பவர்கள் கேட்கலாம் என்று அறிவித்தார்.  ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் 7,000/- ரூபாய் உயர்த்தி 10,000/- ரூபாய்க்கு கேட்டார். பலத்த கைதட்டல்களுக்கிடையில் ஏலம் இறுதி செய்யப்பட்டது. உரிய தொகையைக் கழகத் தலைவரிடம் கொடுத்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்  அரிசியைப் பெற்றுக்கொண்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *