இந்நாள் – அந்நாள்

viduthalai
1 Min Read

மருத்துவ அறிவியலாளர்
பார்பரா  மெக்லின்டாக் பிறந்தநாள் இன்று

(ஜூன் 16, 1902)

  மருத்துவத்திற்கான நோபல் பரிசைத் தனித்துப் பெற்ற முதல் பெண்மணி. தொடர்ந்து மரபியல் ஆய்வில் ஈடுபட்ட பார்பரா 1951 இல் தனது மிகப்பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். “குரோமோசோம்களில் உள்ள மரபணுக்கள் அவ்வப்போது தங்களின் இடங்களை மாற்றிக் கொள்கின்றன” என்றும் கண்டுபிடித்துக் கூறினார். இதைக் ‘குதிக்கும் மரபணுக்கள்’ என்று வர்ணித்தார். அதோடு மரபணுக்கள் தங்களைத் தாங்களே பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளும் என்பதையும் நிரூபித்தார். அவரிடம் பாகுபாடு காட்டிய பல்வேறு ஆய்வாளர்களும் அவரைத் தேடி வந்து பாராட்டினர். மரபியல் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றழைக்கப்பட்டது.

யோசப் மைசிட்டர்
நினைவு நாள் இன்று (16.06.1940)

இந்நாள் - அந்நாள்

பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் கண்டுபிடித்த வெறிநாய்க் கடி  தடுப்பூசி மருந்தை தன் உடம்பில் செலுத்தி சோதனை செய்ய முதன் முதலில் அனுமதித்த யோசப் மைசிட்டர் அவர்களின் நினைவு நாள் – 16.06.1940

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *