பெரம்பூர், ஜூன் 14 வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், அமைச்சரு மான பி.கே.சேகர்பாபு நேற்று (13.6.2025) காலை ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, திரு.வி.க.நகர் பேருந்து நிலையம், அகரம் ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மய்யம், பெரியார் நகர் பேருந்து நிலையம், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன சந்தை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், மக்கள் சேவை மய்ய பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் தியாகராயர் நகர் உள்ளிட்ட 13 பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பெரியார் நகர் மற்றும் திருவிக நகர் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி விரைந்து முடிக்கப்பட்டு, ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். துறைமுகம் மற்றும் கொளத்தூரில் ஏழை, எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு வருகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும் போது வடசென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகி இருக்கும்.குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.நடு நிலையாளர்கள் இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள். வசை பாடியவர்கள் கூட இந்த ஆட்சியை வாழ்த்து கிறார்கள்.
முடிச்சூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.கூடிய விரைவில் வழக்கை இறுதிக்கு கொண்டு வந்து முடிச்சூர் பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர் உரிமத் தொகை பெற விதிகளில் தளர்வு
சென்னை, ஜூன் 14 அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்அய்சி விதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.
இரங்கல்
அகமதாபாத்தில் ஏர் இந்தியா ஏஅய்-171 விமான விபத்தில் மரணமடைந்த பயணிகள், பணியாளர் கள் மற்றும் விமானம் தரையிறங்கும் போது பலியானவர்களுக்கும் எல்அய்சி ஆப் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும், அவர்களுக்கு உரிமத் தொகைகளை விரைவாக அளிக்கவும் உறுதி பூண்டுள்ளது.
எல்அய்சி பாலிசியின் உரிமத் தொகையை எளிதான முறையில் பெறுவ தற்கு, எல்அய்சி ஆப் இந்தியா பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இறப்புச்சான்றிதழுக்கு பதிலாக, அரசு ஆவணங்களில் பாலிசிதாரர் விமான விபத்தில் இறந்தது குறித்த ஆதாரம் அல்லது ஒன்றிய, மாநில அரசு விமானத்துறை ஆணையம் இழப்பீடு வழங்கிய ஆதாரம் இருப்பின் அதை இறப்புக்கான ஆதாரமாக எடுத்துக்கொண்டு உரிமத் தொகை வழங்கப்படும்.உரிமை கோருபவர்களை அணுகி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிமங்களை வழங்கு வதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.