கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

10.6.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*காங்கிரசில் ஒடுக்கப்பட்டோருக்கு உயர்பதவிகள்: தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில், 69 சதவீத பதவிகள், பி.சி., எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டது.

* அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் கலவரத்தை அடக்க கலிபோர்னியா மாகாண ஆளுநர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் என யாரையும் கேட்காமல் மத்திய காவல் படை தன்னிச்சையாக டிரம்ப் அனுப்பி வைப்பு; இந்த நடவடிக்கை தொடர்பாக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடரப்போவதாக பாய்ச்சல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய மாணவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் கை விலங்கு போடப்பட்டு தரையில் பிணைக்கப்பட்டு ‘குற்றவாளியைப் போல நடத்தப்படுகிறார்’ என சமூக வலைத்தளங்களில் கண்டன பதிவு. விசாரிப்போம் என்கிறது இந்திய தூதரகம்.

* மகாராட்டிராவில் மட்டுமல்ல, ஒடிசாவிலும் தேர்தல்களில் மோசடி நடந்ததாக ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பக்த சரண் தாஸ் குற்றச்சாட்டு.

தி இந்து:

*அமித் ஷாவின் மதுரைப் பேச்சு அப்பட்டமான பொய், அருவறுப்பான வஞ்சகம், பிளவு நோக்கம் கொண்ட சூதுரை. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு அழகல்ல. பாஜகவின் எந்த மாதிரியான பிளவுவாதமும், மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை: திமுக துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ.ராசா காட்டமான பேட்டி

* நரேந்திர மோடி அரசின் கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் சமூகக் கட்டமைப்பு, ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்திற்கு ஒரு அடியைக் கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சனம்.

தி டெலிகிராப்:

* இந்தியாவின் ஆளும் கட்சியான மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டுகள் இந்தியாவை மாற்றியமைத்து உள்ளதாகக் கூறுகிறது. ஆனால், நிலைமைகள் வேறாக இருக்கிறது. பத்து தலைப்புச் செய்திகளும் ஒரு தலையங்கமும் வேறுபடுகின்றன என்கிறது தி டெலிகிராப் பத்திரிகை.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *