சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் மொத்தம் 45 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பண்டகசாலைகள் மூலம், பல்பொருள் அங்காடி, மருந்தகம், காய்கறி கடை உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்தப் பண்டகசாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தப்படுவது வழக்கம்.
ஊதிய உயர்வு
அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு பண்டகசாலை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அப்போது, லாபத்தில் இயங்கும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு, நட்டத்தில் இருந்து லாபம் ஈட்டிய பண்டகசாலை சங்கங்களுக்கு 5% ஊதிய உயர்வு, தொடர்ந்து நட்டத்தில் செயல்படும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 3% ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தோடு பண்டகசாலை ஊழியர்களின் ஊதிய உயர்வு காலவரம்பு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது அவர்கள் ஊதிய உயர்வு வழங்கக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ இணையதளம்
தமிழ்நாடு கல்வித்துறை ஏற்பாடு
சென்னை, ஜூன் 9- பள்ளி சாளரம் டிஜிட்டல் தளத்தில் அரசுப் பள்ளிகளின் விவரங்களை பதிவேற்ற தனிப்பக்கம் உருவாக்கப்பட்டிருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தளம்
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பெரு, சிறு மற்றும் குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் செயலாற்றிட ஏதுவாக ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ என்ற இணையதளமும், அதற்காக தனியாக வங்கிக் கணக்கும் தொடங்கப்பட்டு தற்போது அது செயல்பாட்டில் உள்ளது.
இதுவரை கிட்டதட்ட ரூ.658 கோடியே 67 லட்சம் நிதி திரட்டப்பட்டு, அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இந்த திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகள் பற்றிய ஆக்கப்பூர்வமான தகவல்களை பொதுமக்கள், மேனாள் மாணவர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் தெரிந்து கொள்ளும்வகையில் ‘பள்ளி சாளரம்’ என்ற டிஜிட் டல் தளம் உருவாக்கப்பட் டது.
தனிப்பக்கம்
அவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளத்தில் ஒவ்வொரு அரசுப் பள்ளியின் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் மாணவர்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளுக்கு தனிப்பக்கத்தை பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.
இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளின் தரம், வளர்ச்சி மற்றும் மாற்றங்களை தன்னிச்சையாக திரை வழியே காண முடியும் என்றும், அதனை அடிப்படையாக கொண்டு மேனாள் மாணவர்கள், பொது மக்கள் அரசுப் பள்ளிகளின் தேவைகளை அறிந்து பங்களிக்கும் வகையில் இந்த தனிப்பக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.