சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசுவின் தங்கையும், திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி காப்பாளர் தாமரைக் கனியின் தாயாருமான எஸ். பாக்கியம் (வயது 95) அச்சமங்களத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (5.6.2025) இரவு 8.00 மணிக்கு இயற்கை எய்தினார்.
அம்மையார் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை ஏற்று அவர் வாழ்ந்த காலங்களில் தந்தை பெரியாரோடு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்.தனது இறுதி மூச்சுவரை கடவுள் மறுப்பாளராக வாழ்ந்தவர். அந்த சுயமரியாதைச் சுடரொளிக்கு திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமையில், கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.